ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, மிளகு தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி சூரியகாந்தி எண்ணெயை சேர்த்த பின்னர் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து கொதிக்கவிடவும்.
சாதம் எண்பது சதவிகிதம் வெந்தவுடன் கஞ்சியை வடித்து எடுத்து சாதத்தை தனியே வைக்கவும்.
இப்போது, வேறு ஒரு தவாவில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் நான்கு முட்டைகளையும் உடைத்து ஊற்றி அதை பொடிமாசாக கிளறிக்கொள்ளவும்.
முட்டை வெந்தவுடன் அதில் வெங்காயத்தாளை சேர்த்து இறக்கி வைக்கவும்.
மீண்டும் தவாவில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், கேரட், பீன்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அவற்றை வதக்கவும்.
பின்னர், வெங்காயத்தாள் சேர்க்கவும். சேர்க்கப்பட்ட காய்கறிகள் பாதியளவு வெந்து வந்தவுடன் தவாவில் வேக வைத்து எடுத்துள்ள சாதத்தை சேர்த்து அதனுடன் சிறிது சோயா சாஸையும் சேர்த்து கிளறவும்.
சற்று நேரம் சாதத்தை கிளறிய பின்னர் தயார் செய்து வைத்துள்ள முட்டையை சேர்த்து லேசாக கிளறவும்.
சாதம் சரியான பதத்திற்கு வந்தவுடன் அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி மேலே சிறிது வெங்காயத்தாளை தூவினால் உங்கள் குழந்தைகளை வடம்பிடித்து இழுக்கும் முட்டை ப்ரைடு ரைஸ் பரிமாற தயார்.